படுக்கை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனைகள்; டெங்கு காய்ச்சலால் பாதித்த நோயாளிகள் தரையில் தூங்கும் அவலம்…

Asianet News Tamil  
Published : Aug 08, 2017, 07:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
படுக்கை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனைகள்; டெங்கு காய்ச்சலால் பாதித்த நோயாளிகள் தரையில் தூங்கும் அவலம்…

சுருக்கம்

State hospitals without bedding Patients suffered in dengue sleep floor

தருமபுரி

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் குளிர்ந்த தரையில் படுத்து சிகிச்சைப் பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, அ.மல்லாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், ஏராளமானோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால் அங்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் படுக்கை வசதிகள் இல்லாதால் தரையில் படுத்துக் கொண்டுச் சிகிச்சைப் பெறும் அவல நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து மக்கள், “பாலக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் குளிர்ந்த தரையில் படுத்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் உடல்நிலை மேலும் மோசமாகிவிடும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அமைக்க வேண்டும். காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுமருந்து, சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!