மே 1-ல் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு...

 
Published : Apr 26, 2017, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
மே 1-ல் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு...

சுருக்கம்

Special council meeting of 157 panchayats on May 1 - Appointment of the Collector ...

வருகிற மே 1-ஆம் தேதி கரூர் மாவட்டம் முழுவதும் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியயர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “கரூர் மாவட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்,

கிராம ஊராட்சி நிர்வாகம்,

பொதுநிதி செலவினம் திட்ட அறிக்கை,

மகாத்மா தேசிய காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,

அம்மா உடற்பயிற்சி கூடம்” உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன” என்று குறிப்பிட்டு இருந்தார்.

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!