மாட்டுக்கறி விழாவுக்கு ஏற்பாடு செய்த மாணவர் மீது தாக்குதல் – வெடித்தது ஐ.ஐ.டியில் கலவரம்...

Asianet News Tamil  
Published : May 30, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
மாட்டுக்கறி விழாவுக்கு ஏற்பாடு செய்த மாணவர் மீது தாக்குதல் – வெடித்தது ஐ.ஐ.டியில் கலவரம்...

சுருக்கம்

Sooraj a PhD Scholar of IIT Madras attacked by a gang of students for attending a Beef Fest organised in the campus

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி விழா ஏற்பாடு செய்த மாணவர் மீது குறிப்பிட்ட அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு  தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், மாட்டுக்கறி திருவிழா நடத்த ஏற்பாடு செய்த அம்பேத்கர் ஆய்வு மைய மாணவர் சுராஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காரணம் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்ற போதே இரு அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  தற்போது இந்த கருத்து வேறுபாடு கைகலப்பில் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! சனிக்கிழமை அதுவுமா இன்று பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!
சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?