4 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்... ஆசிரியர் கைது!

First Published Jun 12, 2018, 11:35 AM IST
Highlights
Sexual harassment to the 4th grade student - School teacher arrested


நான்காம் வகுப்பு மாணவிக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் இலப்பவிளை அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பொன்ராஜதுரை (49) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, ஆசிரியர் பொன்ராஜதுரை கடந்த வாரம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து
மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பள்ளி முற்றுகையிடப்பட்டது குறித்து, அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றனர். அங்கு போராட்டம் நடத்தி வந்த மாணவியின் பெற்றோரிடம், ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். 

இது குறித்து, மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் பொன்ராஜதுரையை நேற்று இரவு கைது செய்தனர். 

நான்காம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!