"இனி +1 ஃபெயில் ஆனாலும் +2 படிக்கலாம்" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

Asianet News Tamil  
Published : Aug 13, 2017, 11:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
"இனி +1 ஃபெயில் ஆனாலும் +2 படிக்கலாம்" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

சுருக்கம்

sengottayan says about HSC examination

எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்த மத்திய அரசின் கடிதம் ஏது இதுவரை வரவில்லை என்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3 விதமான சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கென 2 வகையான சீருடைகள் வழங்கப்படும் என்றார். 

மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனிச்சீருடை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். மேலும், பதினோராம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டே தோல்வியடைந்த பாடங்களை எழுதலாம் என்றார்.

ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறை மாற்றம் செய்வது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறை மாற்றம் செய்யப்படுவது குறித்து மத்திய அரசின் கடிதம் ஏதும் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட்..! தமிழ்நாட்டின் அச்சம் உண்மையாகிவிட்டது.. முதல்வர் பரபரப்பு கடிதம்
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..