ஜனநாயகத்தை முடக்கும் வகையில் உள்ள புதிய அரசியல் வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாகப் பேசிய செங்கோட்டையன், "தூக்கி வீசினார் எடப்பாடி, தாங்கிப் பிடித்தார் தளபதி" எனக் கூறி தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களுக்காகச் சேவை செய்யும் ஒரே தலைவராகத் தளபதி விஜய் மட்டுமே திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். தவெக-வின் வளர்ச்சியைப் பார்த்து அஞ்சும் 21 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும், விஜய்யின் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என அவர் சூளுரைத்தார்.