தேர்தல் முடியும் வரை அணில் பஜனைளை விடமாட்டாரு போலயே! மரங்களுக்கான மாநாட்டில் சீமான்

Published : Aug 30, 2025, 11:10 PM IST
Seeman

சுருக்கம்

நான் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மரங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது. மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை.

தமிழகத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் 10 மரங்களை நடும் மாணவர்களுக்கு அவர்களின் தேர்வில் 10 மதிப்பெண் வழங்குவேன். பொதுவாக உள்ளூர் மாடு விலைபோகாது என்பதைப் போன்று மரங்கள், இயற்கை வளங்கள் குறித்து நான் பேசுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. அதே நேரத்தில் நான் கூறிய கருத்துகளை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ சொன்னால் அதனை புகழ்ந்து உச்சி முகர்கின்றனர்.

யாரும் எழுதி கொடுத்ததை நான் பேசவில்லை. உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். நடிகர்கள் தங்கள் ஒப்பனையை அழித்த உடனேயே அரியணையில் அமர வேண்டும் என்று நினைப்பதை ஏற்க முடியுமா? திரை போதைக்கு எதிராக பேச தற்போது இங்கு யாரும் இல்லை” என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!