பாலியல் புகாரில் சசிகலா புஷ்பாவின் தாயார் விசாரணைக்கு ஆஜர்…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
பாலியல் புகாரில் சசிகலா புஷ்பாவின் தாயார் விசாரணைக்கு ஆஜர்…

சுருக்கம்

சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலாவின் தாயார் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜாரானார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் பானுமதி. இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்காக சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா, அவருடைய கணவர், மகன், தோழி ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆனார்கள்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் காவல் இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் விசாரணை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விசாரணை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்