திருவள்ளூர்
கடன் வாங்கிய ரூ.3 இலட்சம் பணத்தை விவசாயி, வங்கியில் இருந்து எடுத்து கொண்டுவரும்போது வங்கிக் கணக்கு புத்தகத்தோடு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
பின்னர் உடனே இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு சென்ற இராதாகிருஷ்ணன் அங்கு கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் இராதாகிருஷ்ணனிடம் இருந்து தங்களுடைய விசாரணையை தொடங்கினர்.
கடன் வாங்கிய ரூ.3 இலட்சம் பணத்தை வங்கிக் கணக்கு புத்தகத்தோடு மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் இராதாகிருஷ்ணன் மனமுடைந்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.