
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி பகுதியில் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குடியிருப்புகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள பொதுமக்களையும் முதியவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் வகையில் கூடுதல் படகுகள் மற்றும் வனத்துறை மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கோன்னி வனக் கோட்டத்திலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களுடன் 'குட்டுமாஞ்சி' படகுகள் மீட்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் பதற்றமான நேரலை காட்சிகள் இதோ.