
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.