அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 03:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

சுருக்கம்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்‍கல், மதுரை, தூத்துக்‍குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் மூலனூர், திண்டுக்‍கல் மாவட்டம் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், ஈரோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், மதுரை பெரியார், வேடசந்தூர் மற்றும் காங்கேயத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் இடியுடன் கனமழையும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பகல் நேரத்தில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸூம் வெப்பம் நிலவும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்