திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி – தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 08:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி – தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை

சுருக்கம்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குஎண்ணிக்கையில் முதல் சுற்றில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 48 வாக்குகள் இருந்தன. அதனை எண்ணிக்கை செய்தபோது, 2 வாக்குகள் செல்லாதது என தெரிந்தது. 44 வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலையில் உள்ளது. 2 வாக்குகள் பெற்று திமுக பின் தங்கியது.

2வது சுற்றாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்

PREV
click me!

Recommended Stories

அவசர அவசரமாக மகளிருக்கு ரூ.5000... ஸ்டாலினுக்கு ரூட் போட்டுக் கொடுத்த பாஜக..! மெகா ட்விஸ்ட்..!
சில்லுகளைப் பொறுக்கி எடுத்து கட்சி நடத்தும் விஜய் Uncle..! எங்களுக்கு சவால் விடலாமா? அதிமுக அட்டாக்..!