பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் திருநங்கை… தூத்துக்குடி தாரிகா பானு…

 
Published : May 12, 2017, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் திருநங்கை… தூத்துக்குடி தாரிகா பானு…

சுருக்கம்

plus 2 transgender passed

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில், இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்வு எழுதிய திருநங்கை தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பிளஸ் 2 தேர்வில்  92,.1 சதவீதம் மாணவ-மாணவிகள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர், வழக்கம்போல் மாணவிகள் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5 .2 சதவீதம் கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவர் பிளஸ் 2 தேர்வு  எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த தாரிகா பானு சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசு மேல் நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் இவர் தேர்வு எழுதினார். சயின்ஸ் குரூப் எடுத்துப் படித்த இந்த திருநங்கை 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!