குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதனப் போராட்டம்…

 
Published : Nov 17, 2016, 07:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதனப் போராட்டம்…

சுருக்கம்

தனிக் குடிநீர்த் திட்டப் பணியில் ரூ.32 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் அமைப்பினர்.

கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணியில் ரூ.32 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் கூறியும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் அமைப்பினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டத்திற்கான பணி, ரூ.81.82 கோடியில் 2013 மே 9-ஆம் தேதி தொடங்கியது. பின்னர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, மறு ஒப்பந்தப்புள்ளி மூலம் சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ரூ.75.55 கோடிக்கு 2016 ஜனவரியில் உத்தரவு வழங்கப்பட்டது.

இதையடுத்து, 2016 பிப்ரவரியில் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், 2-வது பைப் லைன் திட்டத்தில் ரூ.32.25 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த இழப்பிற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் அமைப்பினர்.

இதன், நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம், உறுப்பினர் முருகன் ஆகியோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!