
கடவுளின் பாத சுவடுகள் தென்பட்டதாக மக்கள் கருதுவதால், மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடும் நிகழ்வு இலங்கையில் நடைபெற்று உள்ளது.
மனிதர்களின் பாத வடிவம் போன்றே, மிக பெரிய அளவில் பாத சுவடுகள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதால்,அது கடவுளின் பாத சுவடுகளாக தான் இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
இந்த பாத தடம்,இலங்கையில் உள்ள மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பகுதி மட்டுமின்றி, மஸ்கெலியா, வட்மோர் தோட்டப்பகுதியிலும் தென்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பாத சுவடை பார்க்கும் போது,வலது புற கால் பதிந்த வண்ணம் உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அது கடவுளின் பாத சுவுடுகள்தான் என நம்புவதால்,உடனடியாக குங்குமம்,மஞ்சள் வைத்து வழிபட தொடங்கி உள்ளனர்.
தொல்லியல் துறை
இது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் துறை தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் பல இடங்கல் இருந்து நேரில் வந்து வழிபட தொடங்கி உள்ளனர்.
மலேசியாவில்
தாய்லாந்தில்
மேலும் இது போன்ற பாத சுவடுகள், தாய்லாந்து, மலேசியா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல்.
இலங்கையில்
அதே போன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாத சுவடு கடவுள் அனுமனின் பாத சுவடு என்று நம்பப்பட்டு வருகிறது.