ட்ரம்பால் தொழிலாளர்கள் தவிக்கிறாங்க! யோசிக்காமல் கொள்ளாமல் உடனே இதை செய்யுங்க! அலறும் ஓபிஎஸ்

Published : Sep 01, 2025, 10:08 AM IST
OPS

சுருக்கம்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதித் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. 

OPS demands subsidies, tax exemptions, and incentives : இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும், மத்திய, மாநில அரசுகளின் வருவாயை பெருக்குவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளித் துறை, இயந்திரங்கள் துறை, வைரம் மற்றும் நகைகள் துறை, வாகன உதிரிபாகங்கள் துறை, மென்பொருள் துறை ஆகியவை சிறந்து விளங்குகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு ரத்தினக் கற்கள், ஆபரணங்கள், ஆடைகள், பாதணிகள், மரச்சாமான்கள், தொழில் துறை இரசாயனங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், சென்ற மாதம் 27 ஆம் தேதியிலிருந்து இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க நிர்வாகம் 50 விழுக்காடு வரியை விதித்துள்ளது.

அமெரிக்க வரி விதிப்பால் இந்திய தொழில்கள் பாதிப்பு

இதன் காரணமாக, 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறையின் போட்டித் தன்மை, நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும் கூறப்படுகிறது. ஜவுளித் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய அமெரிக்க அரசினுடைய ஐம்பது விழுக்காடு வரி விதிப்பின் விளைவாக ஜவுளித் துறைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ஐம்பது விழுக்காடு வரி விதிப்பை சமாளிக்க மிகப் பெரிய வரி விலக்கு அளிக்கப்படும்; பொருட்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்படும்; நிதி உதவிகள் செய்யப்படும்; சந்தையை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்கா போன்றவற்றிற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், இது குறித்த கொள்கை எதையும் மத்திய அரசு இதுவரை வகுக்காதது தொழிலதிபர்கள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தொழில்களுக்கு சலுகைகள்

இதற்கிடையில், அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய ஆடைகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்றுத் தரவும், பொருட்கள் கப்பலில் ஏற்றப்படும் இடத்தில் உள்ள மொத்த விலை மதிப்பில் 20 விழுக்காடு ஊக்கத் தொகை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, அமெரிக்க அரசின் ஐம்பது விழுக்காடு வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை ஆபத்தி ஆபத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், நாட்டின் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஈடுகட்டும் வகையிலும், மானியம், வரி விலக்குச் சலுகைகள், ஊக்கத் தெராகை, பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கிய ஓர் உதவித் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்