யோவ்..! சுத்தி வளைக்காம வயிறு பசிக்குதுன்னு நேரா சொல்ல வேண்டியது தானே! ஜீயர் உண்ணாவிரதத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

First Published Feb 9, 2018, 5:13 PM IST
Highlights
nettisans teasing jeeyar hunger protest withdraw


என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் என்பதால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறேன் என ஜீயர் அறிவித்ததற்கு நெட்டிசன்கள் செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர். 

ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், ஸ்ரீவில்லி. ஜீயர் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை என்று ஜீயரிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதையடுத்து  உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரை பாஜகவின் எஸ்வி சேகர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

அப்போது, மடாதிபதிகள் உண்ணாவிரதம் இருப்பதால் தான் கோயில்களில் தீ விபத்து ஏற்படுவதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் என்பதால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறேன் என ஜீயர் அறிவித்ததற்கு நெட்டிசன்கள் செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர். 

அதாவது, யோவ்..! சுத்தி வளைக்காம வயிறு பசிக்குதுன்னு நேரா சொல்ல வேண்டியது தானே என்று இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார். 

 

தண்ணீரில் இருக்கும் மீன் கருவாடு ஆகலாம். கருவாடு என்றைக்கும் மீன் ஆகாது. எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம். உண்ணாவிரதம் கேன்சல். என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார். 

மதியம் 3 மணி. இந்த டைம்ல அன்னத்தில் கை வைப்பனே தவிர யாரு கன்னத்துலையும் கை வைக்க மாட்டேன். என இந்த நெட்டிசன் கிண்டல் செய்துள்ளார். 

இன்று வெள்ளிக்கிழமையாய் இருந்ததால் பாய் வீட்டு பிரியாணி வாசம் போராட்டம் செய்த ஜீயரின் மூக்கை துளைத்ததால் உண்ணாவிரதத்தை கைவிட முக்கிய காரணம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார். 

எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது என இவர் கிண்டல் அடித்துள்ளார். 

click me!