முத்துகிருஷ்ணன் மரணம் தற்கொலைதான்!!! சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை என அடித்து கூறுகிறது டெல்லி போலீஸ்...

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 04:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
முத்துகிருஷ்ணன் மரணம் தற்கொலைதான்!!! சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை என அடித்து கூறுகிறது டெல்லி போலீஸ்...

சுருக்கம்

Muthukrishnan suicide death !!! According to the CBI for investigation as it does not beat the Delhi Police

மாணவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்றும், முத்துகிருஷ்ணன் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படித்து வந்தார்.

இந்நிலையில், முத்துகிருஷ்ணன் பல்கலை கழக விடுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த டெல்லி போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர் தந்தை அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததையடுத்து டெல்லி காவல்துறை அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

மாணவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை.

முத்துகிருஷ்ணன் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை.

விசாரணை முடிந்த பிறகே முழு தகவலும் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!