‘உஷார்... ‘அக்.30- முதல் பருவமழை பெய்ய வாய்ப்பு’ – சென்னை வானிலை மையம்

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 06:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
‘உஷார்... ‘அக்.30- முதல் பருவமழை பெய்ய வாய்ப்பு’ – சென்னை வானிலை மையம்

சுருக்கம்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதி முதல் தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

'கியான்ட் புயல்' மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் மத்திய மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக மீனவர்கள் 3 நாட்களுக்கு ஆந்திர பகுதியை நோக்கி மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதி முதல் தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 39 செ.மீ.முதல் 44 செ.மீ. வரை இயல்பான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பஸ் டிக்கெட் ரேட் அதிகமாக‌ இருக்கா? ஒரே ஒரு கால் பண்ணுங்க போதும்.. இதோ புகார் எண்கள்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !