TN Local Body Election Results 2022 :உள்ளாட்சி தேர்தலில் 'கெத்து' காட்டிய.. அமைச்சர்களின் மகன்கள் !!

By Raghupati RFirst Published Feb 22, 2022, 12:48 PM IST
Highlights

கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஆவடி மாநகராட்சியின் 4வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் நாசரின் மகன் ஆசீம் ராஜா வெற்று பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!