அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

Published : Jun 06, 2026, 09:03 PM IST

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு, தற்போது மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த அவர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இவற்றுடன், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையைச் சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், "அங்கு மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்; எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ, அதே நடைமுறைதான் தொடரும்" என்றார். திருப்பரங்குன்றம் எப்போதும் போல அமைதியாக நிலவ வேண்டும் என்பதே தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் பாணியில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
08:28நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததை கண்டிக்கிறோம் - பிரேமலதா பேட்டி
04:38காவிரி விவகாரம் | அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த முடிவும் எட்டப்படாது ! நிர்மல் குமார் பேட்டி
03:59பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி
07:05எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதற்றமா? வாய் திறக்காத முதல்வர் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
08:30விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்பு மானியம்! | அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் 2026
07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
07:28வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் !