அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

Published : Jun 06, 2026, 09:03 PM IST

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு, தற்போது மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த அவர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இவற்றுடன், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையைச் சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், "அங்கு மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்; எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ, அதே நடைமுறைதான் தொடரும்" என்றார். திருப்பரங்குன்றம் எப்போதும் போல அமைதியாக நிலவ வேண்டும் என்பதே தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் பாணியில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
03:35TVK vs DMK | புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!
05:30மத நல்லிணக்கம் போற்றுவோம்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்வர் விஜய்!