
பள்ளியில் படித்த போது தான் கணக்கில் வெறும் 29 மார்க் மட்டுமே எடுத்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அபாகஸ் போட்டியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவர் பரிசு கொடுத்து பாராட்டினார்.
நான் இப்படி கூறுவதால் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பது முக்கியம என்று யாரும் கருதிவிட வேண்டாம். படிப்பு என்பது முக்கியம் தான். ஆனால் உலக அறிவு அதைவிட முக்கியம். என்னை எடுத்துக் கொள்ளுங்கள் நான் பள்ளியில் படித்த போது கணக்கில் எடுத்த மதிப்பெண்கள் வெறும் 29 தான். ஆனால் தற்போது அபாகஸ் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளேன் என்று ஜெயக்குமார் கூறியதும், அரங்கில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.