காதில் பஞ்சுடன் ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

 
Published : Oct 06, 2017, 10:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
காதில் பஞ்சுடன் ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

சுருக்கம்

minister dindigul srinivasan in governor swearing ceremony

ஆளுநர் பதவியேற்பு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காதில் பஞ்சுவைத்தபடி கலந்துகொண்டார்.

சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காது புண் இன்னும் முழுமையாக சரியாகாதபோதிலும் ஆளுநர் பதவியேற்பு விழாவில் காதில் பஞ்சுடன் கலந்துகொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆளுநர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடியாமல் காதில் புண் இருந்தும்கூட பஞ்சு வைத்துக்கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழாவில் கலந்துகொண்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பேசி கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!