
டெல்லியில் நீட் முறைகேடு மற்றும் மாணவர் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சென்னையில் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முடக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்த அவர், மாணவர்களின் உரிமைகளை மீட்கும் போராட்டத்திற்குத் தமிழக அரசு என்றும் துணை நிற்கும் எனக் குறிப்பிட்டார்.