ராணுவ அதிகாரியின் மனைவியைக் கொலை செய்ததும் மேஜர் நிகில் என்ன செய்தார் தெரியுமா ? அதிர்ச்சி தகவல் !!

 
Published : Jun 28, 2018, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ராணுவ அதிகாரியின் மனைவியைக் கொலை செய்ததும் மேஜர் நிகில் என்ன செய்தார் தெரியுமா ? அதிர்ச்சி தகவல் !!

சுருக்கம்

Military Major Nikil connection with many women

டெல்லியில் ராணுவ அதிகாரியின் மனைவி சைலஜாவைக் கொலை செய்த பின் மேஜர் நிகில், டேட்டிங் பக்கத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ அதிகாரி  அமித் திவேதி டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். அவரது மனைவி சைலஜா கடந்த சனிக்கிழமைஇ மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றவர் காணாமல் போனார். இதையடுத்து டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சைலஜா கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார்  நடத்திய விசாரணையில்   மற்றொரு இராணுவ மேஜரான நிகில் ஹண்டாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர்   உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருந்த  சிரிலை போலீசார் கைது செய்தனர்..

கடந்த 2015-ஆம் ஆண்டு சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்து வந்துள்ளார். அங்குதான் நிகில் ஹண்டாவுக்கு, சைலஜாவுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அமித்துக்கு டெல்லிக்கு பணியிட மாறுதலாகியுள்ளது. ஆனாலும் நிகில்-சைலஜா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது டெல்லி வந்த நிகில் சைலஜாவின் திருமணம் செய்து கொள்ளும்படி கூறவே, அவர் மறுப்பு தெரிவிக்கவே இது கொலையில் போய் முடிந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு  நடைபெற்று வரும் நிலையில்  மேஜர் நிகில் குறித்து மேலும் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன . சைலஜாவை கொலை செய்த இராணுவ மேஜர் நிகில் ஹண்டா கடந்த ஜனவரி மாதம் முதல் கொலை நடந்த நாள்வரை 3,500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

இந்த நிகிலுக்கு பல்வேறு போலியான பெயரில் முகநூல் கணக்குகள் இருந்துள்ளன.  அவர் பெண்களை ஈர்க்கும் வகையில் போலியான புரொபைல்களுடன் டேட்டிங் பக்கங்களிலும் தொடர்பில் இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ராணுவ மேஜர் மனைவி சைலஜா கொலைக்கு பின் நிகில் இந்த பக்கங்களில் இருந்த பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார்.  இதுபற்றி அறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

டெல்லியின் பட்டேல் நகரில் வசித்து வரும் அந்த பெண்ணிடம் நிகில் அன்பாக பேசி,  திருமண பந்தத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார். நல்லவேளையாக தற்போது அவரைப்பற்றி தெரிந்து கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைதுள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"