கடலுக்கு போகாதீங்க.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

 
Published : Dec 04, 2017, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
கடலுக்கு போகாதீங்க.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

meteorological department warning fishermen

தெற்கு வங்கக்கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:

டிசம்பர்  6 வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும். தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மழை வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!