முன்னோர்கள் பாணியில் மாட்டு வண்டியில் சென்று திருமணம்; சொகுசு கார், ஹெலிகாப்டர் வேஸ்ட்னு மணமகன் பேச்சு…

 
Published : Jun 05, 2017, 08:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
முன்னோர்கள் பாணியில் மாட்டு வண்டியில் சென்று திருமணம்; சொகுசு கார், ஹெலிகாப்டர் வேஸ்ட்னு மணமகன் பேச்சு…

சுருக்கம்

marriage happened in ancestors way

சிவகங்கை

காரைக்குடியில் முன்னோர்கள் பாணியில் கலாசாரத்தை நினைவுப் படுத்தும் விதமாக மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று திருமணம் செய்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது கோ.வேலங்குடி. இந்தப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கும், காரைக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த கீர்த்திக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நேற்று தெற்குத்தெரு பகுதியில் வைத்து திருமணம் நடைப்பெற்றது.

இதனையொட்டி மணமகனான கிருஷ்ணா பாரம்பரிய முறைப்படி பழங்கால மக்கள் அப்போதைய திருமணத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று திருமணம் முடித்ததைப்போல், திருமணம் செய்து மக்களிடையே நமது பாரம்பரியத்தை நினைவுகூர விரும்பினார்.

அவர் விரும்பியபடியே மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் அமரவைத்துக் கொண்டு மணமக்களின் உறவினர்கள் மற்ற மூன்று மாட்டு வண்டிகளில் ஏறி திருமண மண்டபம் சென்றனர்.

அங்கு திருமணம் முடிந்த பின்னர் மணமகளின் வீட்டில் இருந்து மணமகனின் வீட்டிற்கு புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மேளதாளம் முழங்க ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றனர்.

பின்னர் அங்கு மணமக்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மணமகன் கிருஷ்ணா கூறியது:

“தற்போதுள்ள விஞ்ஞான அறிவியல் உலகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட தங்களது திருமணத்தை ஆடம்பரமாக செய்து வருகின்றனர். திருமணம் முடிந்த பின்னர் விலை உயர்ந்த காரில் மணமக்கள் அழைப்பு நடைபெறுகிறது.

ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் எவ்வாறு திருமண அழைப்பை நடத்தினார்கள் என்பது தற்போதுள்ள இளைஞர்களுக்கும், மக்களுக்கும் தெரியவதில்லை. அவ்வாறு தெரிந்தால் கூட அவர்கள் சினிமா படங்களில் வரும் காட்சிகளை மட்டும்தான் காணமுடியும்.

இதுதவிர இன்னும் வசதி படைத்த சிலர் தற்சமயம் ஹெலிகாப்டரில் வந்து மணமக்களை அழைத்துச் சென்று திருமணம் முடித்த செய்திகளை கூட நாம் தெரிந்துள்ளோம்.

இவற்றிற்கு மாற்றாக புதுமையாக எனது திருமணத்தை நடத்த விரும்பி அதை என்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தபோது அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து எனது திருமணம் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று நடைபெற்றது.

முன்னதாக எனது வீட்டில் வளர்த்த காளைகளை வண்டியில் பூட்டி ஊர்வலமாக சுமார் ஆறு கிலோ மீட்டர் சென்றோம். பழங்காலத்து பாரம்பரிய சம்பவத்தை மக்களுக்கு நினைவுக்கூரும் முயற்சியாகவும் இது அமைந்தது” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!