சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் - தமிழக வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

Asianet News Tamil  
Published : Apr 24, 2017, 09:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் - தமிழக வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

Maoists attack in Sukma area - Tamil Nadu soldiers dead

சத்தீஸ்கர் - சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 3 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா என்ற பகுதியில் முகாமிட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 3 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழக வீரர்கள் செந்தில் குமார், அழகுபாண்டி, திருமுருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!