நடிகர் மற்றும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு 'தாதாசாகேப் பால்கே' விருது - திரையுலகினர் வாழ்த்து

 
Published : Apr 24, 2017, 08:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
நடிகர் மற்றும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு 'தாதாசாகேப் பால்கே' விருது - திரையுலகினர் வாழ்த்து

சுருக்கம்

Dadasaheb Phalke Award for Actor and Director K.Vishwanam

2016-ம் ஆண்டின் 'தாதாசாகேப் பால்கே' விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமா துறையில் தனது பெரும்பாலான பங்களிப்பை அளித்து வரும் திரையுலகினருக்கு ஆண்டு தோறும் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் மறைந்த இயக்குனர் தாதா சாகிப் பால்கே பெயரில் விருது வழங்கபடுவது வழக்கம்.

இந்நிலையில், 2016 ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை மே 3 ஆம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியும், யாரடி நீ மோகினி, ராஜபாட்டை ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.விஸ்வநாத் நடித்துள்ளார்.

இத்தகைய விருது வாங்கிய கே.விஸ்வநாத்திற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி