புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்ற சிறுமியை இடித்துவிட்டு லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டார். மோட்டார் பைக்கில் விரட்டிசென்று மடக்கிப் பிடித்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரை அடித்து உதைத்தனர்.
சைக்கிளில் சென்ற சிறுமியை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர் என்ற தகவல் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.