தண்டவாளத்தை கடந்த போது விபரீதம் - எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் உடல் சிதறி பலி

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 04:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
தண்டவாளத்தை கடந்த போது விபரீதம் - எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் உடல் சிதறி பலி

சுருக்கம்

திருவொற்றியூர் பூம்புகார் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வி (65). நேற்று காலை செல்வி, பொன்னேரி அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டில் இருந்து திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு டிக்கெட் வாங்கி கொண்டு, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்,சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.

தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை  கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிப்.8ல் பிரமாண்ட விழா நடத்தும் ஜாக்டோ ஜியோ
ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது - கிருஷ்ணசாமி கேள்வி