சிறார்களை பிச்சையெடுக்க வைத்த 2 பெண்கள் கைது - கொடைக்கானல் போலீசார் அதிரடி நடவடிக்கை

 
Published : May 04, 2017, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
சிறார்களை பிச்சையெடுக்க வைத்த 2 பெண்கள் கைது - கொடைக்கானல் போலீசார் அதிரடி நடவடிக்கை

சுருக்கம்

kodaikanal police arrest two women

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சிறார்களை பிச்சை எடுக்க வைத்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுற்றுலாப்பகுதியான கொடைக்கானலில் அநாதையாக உள்ள சிறார்களை பிச்சை எடுக்கும் தொழிலில் பெண்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் முக்கிய பகுதிகளில் பிச்சை எடுக்கும் நபர்களின் விவரங்களைௌ சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது சரஸ்வதி மற்றும் காயத்திரி ஆகிய இரண்டு பெண்கள், அநாதையாக இருக்கும் சிறார்களை மிரட்டி அவர்களை பிச்சையெடுக்கும் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. உரிய ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அவ்விருவரையும் கொடைக்கானல் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.  

மேலும் 10 வயது சிறுமி, மற்றும் 12 வயது சிறுவனை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!