நயினார் எங்களிடம் பேசியதை வெளியில் சொல்ல முடியாது: கே.என்.நேரு காட்டம்

Published : Jun 29, 2025, 06:02 PM IST
K.N. Nehru Takes Aim at Nainar Nagendran

சுருக்கம்

நயினார் நாகேந்திரன், பாஜக தலைவராக வருவதற்கு முன் திமுகவிடம் என்ன பேசினார் என்பதை வெளியில் சொல்ல முடியாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரிசெய்யட்டும் என்றும் அவர் கூறினார்.

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரிசெய்துவிட்டு, திமுக கூட்டணியைப் பற்றி பேசட்டும் எனவும் கூறினார்.

நயினார் நாகேந்திரன் மீதான விமர்சனம்:

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.” என்றார்.

மேலும், "அவர்கள் முதலில் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு, கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களைப் பற்றி பேசட்டும்." என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

நெல்லையப்பர் கோவில் தேரோட்ட ஏற்பாடுகள்:

தொடர்ந்து பேசிய அமைச்சர், வருகிற ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ள நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?