ஜெ. மணல் சிற்ப விவகாரம்: ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு...

Asianet News Tamil  
Published : Aug 08, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
ஜெ. மணல் சிற்ப விவகாரம்: ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு...

சுருக்கம்

jayalalitha sand issue district collector submit the statement

 

கன்னியாகுமரியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி ஆட்சியர் அறிக்கை அளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அருகே வடசேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பம் கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் இந்த மணல் சிற்பம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி, மகேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மகேஷின் மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும்,இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

  

PREV
click me!

Recommended Stories

கோவையில் BMW காரில் வந்த நபர் அடாவடி.! ரெட் டாக்ஸி ஓட்டுனரை தகாத வார்த்தையால் பேசி தாக்குதல்! நடந்தது என்ன?
காசியும் ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத சொந்தம்! கலாம் பிறந்த மண்ணில் சி.பி. ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி!