CM MK Stalin : காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு.. முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published : Aug 04, 2023, 08:13 PM IST
CM MK Stalin : காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு.. முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவு

சுருக்கம்

காவலர்களின்‌ குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களின்‌ குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும்‌ கல்விப்‌ பரிசுத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவலர்களின்‌ குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌. மூலம்‌ தற்போது 1400 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா 25 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ 4 வருடங்களுக்கு வழங்கப்படுவது, எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ வழங்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், காவலர்களின்‌ குழந்தைகளுக்கு கல்விப்‌ பரிசுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பரிசுத்‌ தொகை இரட்டிப்பாக்கப்படும்‌ என்றும்‌ 2023-24ஆம்‌ ஆண்டிற்கான காவல்துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ அறிவிக்கப்பட்டது.  

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும்‌ வகையில்‌, காவலர்களின்‌ குடும்பத்தைச்‌ சார்ந்த 200 மாணண்களுக்கு தலா 30 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ 4 வருடங்களுக்கு மொத்தம்‌ ரூ.2.4 கோடியில்‌ சிறப்பு கல்வி உதவித்‌ தொகை வழங்கிடவும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்‌, 37 காவல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ 9 காவல்‌ ஆணையரகங்களில்‌ பணிபுரியும்‌ காவலர்களின்‌ குழந்தைகளுக்கு கல்விப்‌ பரிசுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வில்‌ முறையே முதல்‌ பத்து இடங்களைப்‌ பெறும்‌ 460 மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்படும்‌ மொத்த கல்விப்‌ பரிசுத்தொகையை ரூ.28,29,0007-ல்‌ இருந்து ரூ.56,58,0007-ஆக இரட்டிப்பாக்கி கல்விப்பரிசுகள்‌ வழங்கவும்‌ அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  

உயர்த்தப்பட்ட சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும்‌ கல்விப்பரிசுகள்‌ வழங்குவதால்‌ ஏற்படும்‌ கூடுதல்‌ செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர்‌ நல நிதிக்கு அரசால்‌ தற்போது வழங்கப்பட்டு வரும்‌ மானியத்‌ தொகையினை ரூ.4.2 கோடியிலிருந்து ரூ.2,96,58,000/- ஆக உயர்த்தியும்‌ அரசு ஆணை பிறப்பித்துள்ளது” என்று அந்த அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!