திமுக தொடர்ந்து டார்ச்சர் செய்கிறது... பேரூராட்சி தலைவியின் கணவர் அதிரடி முடிவு!!

Published : Mar 11, 2022, 03:59 PM IST
திமுக தொடர்ந்து டார்ச்சர் செய்கிறது... பேரூராட்சி தலைவியின் கணவர் அதிரடி முடிவு!!

சுருக்கம்

திமுக தொடர்ந்து தொந்தரவு செய்தால் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று தருமபுரி பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவியின் கணவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திமுக தொடர்ந்து தொந்தரவு செய்தால் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று தருமபுரி பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவியின் கணவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவியது. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றனர். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு அறிக்கை விடுத்தார். அதில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தினார். அதன்பேரில் திமுகவினர் பதவி விலகினர். சில இடங்களில் பதவி விலகாதவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதில் திமுகவினர் 8 வேட்பாளர்களும், பாமக 3 வேட்பாளர்களும் விசிக வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பொ.மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு திமுக தலைமை ஒதுக்கி அறிவித்தது. ஆனால் 13வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி புஷ்பராஜ், திமுக தலைமை அறிவிப்பை ஏற்காமல், கூட்டணி வேட்பாளரை எதிர்த்து, கடந்த 4 ஆம் தேதி தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பு மூலம், 8 திமுக உறுப்பினர்களின் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 4 வது பொது வார்டு கவுன்சிலர் சின்னவேடி தலைமையில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திமுக தலைமை அறிவித்தது போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு பேரூராட்சி தலைவர் பதவியை தர வேண்டும் என விசிகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே போல் திமுக தலைவர் கட்டளையை மீறக் கூடாது என திமுக தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் சாந்திபுஷ்பராஜியிடம் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் புஷ்பராஜ் பதவி விலக மறுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட் சாந்தியின் கணவர் புஷ்பராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், நான் திமுகவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். முன்னாள் பேரூராட்சி தலைவர், தற்போது திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த பேரூராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விசிகவினர், பாமகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் தனியாக போட்டியிட்டேன். இது தலைமைக்கு தெரியாது. பொ.மல்லாபுரம் பேரூராட்சி கூட்டணிக்கட்சியான விசிகவிற்கு ஒதுக்கியதால், என்னை பதவி விலக வேண்டும் என திமுக தலைமை டார்ச்சர் கொடுத்து வருகிறது. எனக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதால், நான் தற்கொலை செய்து கொள்வேன். என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை, நான் பதவி விலக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை
எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்