அதிகமான குடும்பத்தகராறுக்கும் குற்றச்செயலுக்கும் காரணமே இதுதான்.. - வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்...!

 
Published : Mar 10, 2018, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
அதிகமான குடும்பத்தகராறுக்கும் குற்றச்செயலுக்கும் காரணமே இதுதான்.. - வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்...!

சுருக்கம்

if divorce s happened by mobile phone

செல்போன்கள் குடும்பத்தினர்கள் இடையே பிரிவை ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கோயம்புத்தூர் அன்னூரில் இண்டஸ் டவர்ஸ் நிறுவன செல்போன் டவரை அகற்றும்படி பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது. 

பேரூராட்சியின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், செல்போன்கள் டவர் அமைக்க போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு ஆணையிட்டுள்ளனர். 

மேலும் செல்போன்கள் குடும்பத்தினர்கள் இடையே பிரிவை ஏற்படுத்துவதாகவும் கர்ணனின் கவச குண்டலம் போல் மக்களின் உடல் அங்கமாக செல்போன்கள் மாறிவட்டதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

பல்வேறு குற்றச்செயல்களுக்கு செல்போன்கள் தான் முக்கிய காரணமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. 

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு