தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சமீபத்தில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், பயனாளிகளுக்கு மாதந்திர ரூ.1,000 திட்டமிட்டபடி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்காக சில கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்ததால், திட்டம் தாமதமாகுமா என்ற அச்சம் மக்களிடையே உருவானது. ஆனால், அரசு வழக்கம்போல் மாதத்தின் 15-ஆம் தேதி நிதியை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளது.