காட்டுபன்றி வேட்டை; ஐவர் கைது…

Asianet News Tamil  
Published : Nov 08, 2016, 03:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
காட்டுபன்றி வேட்டை; ஐவர் கைது…

சுருக்கம்

நாகர்கோவில் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் காட்டுப்பன்றி உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் வசித்து வருகின்றன.

இதுபோன்ற அரிய வகை விலங்குகள், இந்தப் பகுதிகளில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. 

இது தொடர்பான புகார்களும் மாவட்ட வன அலுவலர் விஸ்வநாதனிடம் அளிக்கப்பட்டும் வருகிறது.

இதன்பேரில், வேளிமலை சரக வன அலுவலர் சில்வெஸ்டர், தெற்கு பிரிவு வனவர் அருண் மற்றும் வனக்காப்பாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் வனப்பகுதியில் அடிக்கடி சுற்றுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட வனைத்துறை அதிகாரிகள் அந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில், அவர்கள் ஐந்து பேரும், நயினார்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜன், சேகர், அமல்ராஜ், ஷீலன், பிரவீன் ஆகியோர் என தெரியவந்தது.

பின்னர், வனத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேரையும் வனப் பாதுகாவலர்கள் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? இன்றைய நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
அந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு தகுதியே இல்லை ஸ்டாலின்.. திமுகவை விடாமல் இறங்கி அடிக்கும் அன்புமணி!