ஜெயலலிதா மகன் நான் - போர்ஜரி வழக்குல உள்ள போகனுமா? - வாலிபருக்கு நீதிபதி எச்சரிக்கை...

 
Published : Mar 17, 2017, 07:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
ஜெயலலிதா மகன் நான் - போர்ஜரி வழக்குல உள்ள போகனுமா? - வாலிபருக்கு நீதிபதி எச்சரிக்கை...

சுருக்கம்

Her son - I want to go in valakkula forgery? - The judge warned the young men

ஜெயலலிதா மகன் நான்தான் எனவும், அவரின் சொத்துக்களை எனக்கே மீட்டுத்  தாருங்கள் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு வாலிபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி போர்ஜரி வழக்கில் உள்ளே போகனுமா என எச்சரிக்கை விடுத்தார்.

ஈரோடு மாவட்டம், காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி, நான் ஈரோட்டில் ஜெயலலிதாவின் தோழி வசந்தாமணி வீட்டில் வசித்து வருகிறேன்.

எனது தாயார் ஜெயலலிதாவை கொன்றவர்கள் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான்.

எனக்கும், எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.

ஜெயலலிதாவிற்கு நான் ஒரே மகன் என்பதால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம்.

எனது தாயாரான ஜெயலலிதாவுடன் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திதி முதல் 18 ஆம் தேதி வரை 'வேதா நிலையம்' போயஸ்கார்டனில் இருந்தேன்.

அம்மாவுடன் அறிமுகம் செய்யும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அப்பொழுது ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செப்டம்பர் 22 ஆம் தேதி சசிகலா ஜெயலலிதாவை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்.

இதனால் சசிகலாவிற்கு பயந்து என்னால் வெளியே வர முடியவில்லை.

அதனால் எனக்கும் எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் தகுந்த பாதுக்கப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமியுடன் கோர்ட்டில் ஆஜரானார்.

மனுவை விசாரித்து பார்த்த நீதிபதி, ‘இந்த மனுவை பார்த்தாலே பொய் வழக்கு என்று தெளிவாக தெரிகிறது. கோர்ட் நினைத்தால் ஃபேக் போர்ஜரி டாக்குமெண்ட் வழக்கில் உள்ளே போட்டுவிடுவோம்.

உன்னிடம் உள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் கையெழுத்திட்ட ஒரிஜினல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு நாளை காலையில் ஆஜராக வேண்டும்.

இவரது ஆவணங்களையும், இவரையும் விசாரித்து வரும் திங்கட்கிழமை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கை வரும் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தர விட்டார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! NIAக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது! சிக்கியது எப்படி?