
திருச்சியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து ஒன்று சிக்கித் தவித்தது. மழைவெள்ள பாதிப்புகள் மற்றும் சுரங்கப்பாதையில் பேருந்து சிக்கிய பிரத்யேகக் காட்சிகள் இதோ.