அடுத்த 4 நாட்களுக்கு மழை..! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..

Published : Apr 11, 2022, 02:18 PM IST
அடுத்த 4 நாட்களுக்கு மழை..! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..

சுருக்கம்

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

11.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூட மிதமான மழைபெய்யும். தென் தமிழக, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

12.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.04.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் , வட தமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.04.2022: உள் தமிழகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.04.2022: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: 

ஸ்ரீவைகுண்டம்(தூத்துக்குடி), ராமேஸ்வரம்( ராமநாதபுரம்), மயிலாடி( கன்னியாகுமரி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினம் (தூத்துக்குடி), எட்டயபுரம் (தூத்துக்குடி), கோவிலங்குளம்( விருதுநகர்),ஆர்.எஸ்,மங்கலம்( ராமநாதபுரம்), குருங்குளம்(தஞ்சாவூர்), காயல்பட்டினம்( தூத்துக்குடி) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

காரைக்கால்(காரைக்கால்), தென்காசி( தென்காசி), பட்டுக்கோட்டை(தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை(கன்னியாகுமரி), சூரலக்கோடு(கன்னியாகுமரி), தொண்டி(ராமநாதபுரம்) தலா 4 செ.மீ மழையும், பாம்பன்(ராமநாதபுரம்),ஆயக்குடி (தென்காசி),திருப்பூண்டி (நாகப்பட்டினம்),சாத்தான்குளம்(தூத்துக்குடி), தக்கலை(கன்னியாகுமரி), நாகர்கோவில்(கன்னியாகுமரி), மதுக்கூர்(தஞ்சாவூர்), திருசெந்தூர்(தூத்துக்குடி), வேதாரண்யம்(நாகை) தலா 4 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

11.04.2022, 12.04.2022: தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!