துணைவேந்தர்கள் நியமிக்க கோரும் வழக்கு - அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Asianet News Tamil  
Published : May 18, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
துணைவேந்தர்கள் நியமிக்க கோரும் வழக்கு - அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சுருக்கம்

HC notice to TN govt in vice chancellor case

பல்கலை கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க கோரிய வழக்கில் அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவை துணைவேந்தர்கள் இல்லாமல் பல மாதங்களாக இயங்கிவருகின்றன.

அண்ணா பல்கலை கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் மேற்படிப்பு, வேலை உள்ளிட்டவைகளில் பல முடக்கங்கள் கானப்படுகின்றன.

2 மாதத்தில் பெரியார், பாரதிதாசன் பல்கலை கழகங்களின் துணைவேந்தர் பதவியும் காலியாக உள்ளது.

இந்நிலையில், பல்கலை கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு, பல்கலை கழக மானிய குழுவும் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Nepal Flood: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்.. எத்தனை பேர் மீட்பு? எத்தனை பேர் மாயம்? தமிழக அரசு ரிப்போர்ட்!
Vegetable Price Today: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு.. இன்று எந்த காய்கறி எவ்வளவு தெரியுமா?