டுவிட்டரில் தமிழில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஹர்பஜன்சிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த ஹர்பஜன்சிங் 11-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார்.
ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டி இந்தியாவும் பல முக்கிய நகரங்களில் நடக்க உள்ளது.இதுவரை 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே அணிகளின் சார்பாக் தக்க வைக்கப்பட்டு உள்ளது.மற்றவர்கள் ஐ.பி.எல். மெகா ஏலம் விடப்பட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், கெதார் ஜாதவ் உள்ளிட்டோர் பங்கு பெற்று உள்ளனர்
ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன் சிங்க் தமிழில் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழில் ட்வீட் செய்து உள்ளார்.அதில்,வணக்கம் தமிழகம் என தொடங்கி....
வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு Happy to be Playing for my new home
— Harbhajan Turbanator (@harbhajan_singh)