விஜயபாஸ்கரை சிக்க வைத்த மாதவராவ் கைது... மேலும் 6 பேரை தூக்கியது சிபிஐ!

By vinoth kumarFirst Published Sep 6, 2018, 1:39 PM IST
Highlights

குட்கா ஊழல் வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 6 பேரை அதிரடியாக சிபிஐ கைது செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

குட்கா ஊழல் வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 6 பேரை அதிரடியாக சிபிஐ கைது செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இன்று அதிகாலை வரை நடந்த இந்த சோதனையில், அனைவரது வீடுகளிலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், இன்று காலை ராஜேஷ், நந்தகுமார் ஆகிய குட்கா புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரும் சிக்கினர்.

இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியகதாகவும், இதில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இதையொட்டி அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தனிநபர்கள், புரோக்கர்கள் என பலரிடம் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், பலரும் விசாரணை வளைத்து வந்துள்ளதாக தெரிகிறது.

முதல் கட்ட விசாரணையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மற்றும் கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் செங்குன்றம் பகுதியில் குடோன் அமைக்க அனுமதி வழங்கியுள்ளனர். அங்கு, தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைக்க, சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அவர்களையும், விசாரணை வளைத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதில் சிக்கியுள்ள பலரது பெயர் பட்டியலில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விசாரணை முடிந்தவுடன், கைது செய்ய்ப்பட்ட 6 பேரையும், சிபிஐ போலீசார் டெல்லி அழைத்து சென்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், தமிழக அதிகாரிகள் இதில் தலையிட முடியாது என்றும், அரசியல் பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!