7 தமிழரின் 27 ஆண்டுகள் நடந்தது என்ன? முழு அலசல்!

Published : Sep 06, 2018, 01:10 PM ISTUpdated : Sep 09, 2018, 07:51 PM IST
7 தமிழரின் 27 ஆண்டுகள் நடந்தது என்ன? முழு அலசல்!

சுருக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரின் விடுதலையை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது. 

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரின் விடுதலையை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை:

* 1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

* 1998 ஜனவரி 28-ல் பேரறிவாளன் உட்பட 26 பேருக்கு சென்னை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

* 1999 அக்டோபர் 17ல் 7 பேரின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்தார். பின்னர் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

* 2000 ஏப்ரல் 28-ல் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்த கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.
 
* 2011 ஆகஸ்ட் 26-ல் தேதி 11 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கருணை மனுக்களளை நிராகரித்தார்.

* 2011 ஆகஸ்ட் 30-ல் ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* 2014 பிப்ரவரி 18-ல் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

* 2014 பிப்ரவரி 19ல் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இம்முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இதையடுத்து 7 பேரை விடுதலை செய்யும் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.

* 2015 ஜூலை 11-ல் 7 பேர் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அறிவிக்கப்பட்டது. 

* 2015 டிச.2-ல் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை., மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக் கூறியது உச்சநீதிமன்றம்.

* 2016 பிப்ரவரி 14-ல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகமானது 7 பேர் குறித்த தகவல்களைக் கோரியது, தமிழக அரசின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு.

* 2016 மார்ச் 2-ல் 7 பேர் விடுதலைக்காக மத்தியஅரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது,

* 2018 ஏப்ரல் 16–ல் 7 பேரையும் விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.

* 2018 ஆக. 11-ல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதும் 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்து வாதிட்டது மத்திய அரசு.

* 2018 செப்டம்பர் 6 (இன்று) 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி வழக்கை முடித்து வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?
அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை