கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில்  சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து...!

Asianet News Tamil  
Published : Jun 16, 2018, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில்  சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து...!

சுருக்கம்

guindy Kathirapara accident in the fall of the freight vehicle

சென்னையில், கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ப்ளூ டார்ட் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக சரக்கு வாகனம் அடையாறு நோக்கி சென்றது.

கிண்டி கத்திப்பாரா பாலத்தைக் கடந்த போது கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில், வாகனத்தின் ஓட்டுநர் முத்துராஜ் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.

சாலையின் நடுவே சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் கிரேனை வரவழைத்து, சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 02 January 2026: 4ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..! புதுக்கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடு
செல்போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. இன்று தமிழகத்தில் 7 மணிநேரம் மின்தடை!