செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Published : Mar 06, 2024, 05:10 PM IST
செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு!

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டக் கொண்டே வருகிறது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

முன்னதாக, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சாதாரண ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றமும் ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் ஒரு ஜீரோ.. நானும் உச்சத்தில் இருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. தமிழிசை காட்டம்
வாயில் வடை சுடும் விஜய்.. வெறும் பில்டப் தான்.. தவெக காணாம போகப்போகுது.. செல்லூர் ராஜூ அட்டாக்!