தமிழகத்தில் அதிகரித்த கழுகுகளின் எண்ணிக்கை..! கணக்கெடுப்பில் வெளியான முக்கிய தகவல்

By Ajmal KhanFirst Published Jan 25, 2024, 12:20 PM IST
Highlights

கழுகுகளுக்கு உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த வனவிலங்கு சடலங்களை புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 
 

கழுகுகள் கணக்கெடுப்பு பணி

தமிழகத்தில் கழுகுகளின் கணக்கெடுப்பு தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை ஒட்டிய நிலப்பரப்புகளான, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேரளாவின் வயநாடு, பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகாவின் நாகர்ஹோல் புலிகள் காப்பகம் ஆகியவை வரலாற்று ரீதியாக கழுகுகளின் எண்ணிக்கை அதரிக்கப்படுகிறது.

கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320

கணக்கெடுப்பு கழுகுகளின் இரண்டாவது ஒருங்கிணைந்த 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த முறை பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பில் இடம் பெற்றது. வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 139 வான்டேஜ் பாயின்ட்களில் நான்கு அமர்வுகளாக இரண்டு நாட்களில் 8 மணிநேரம், அனைத்து 139 வான்டேஜ் புள்ளிகளிலும் நடத்தப்பட்டது. கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகள்

கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள். மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கழுகுகள் உணவு தேடும் பகுதிகளில் நீர் துளைகளை உருவாக்குதல். 

கழுகுகளை அதிகரிக்க நடவடிக்கை

கழுகுகளுக்கு உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த வனவிலங்கு சடலங்களை புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுகின்றன. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து சூழல் சமநிலையை எய்த இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

Vaiko vs Governor Ravi : ஆளுநர் ரவிக்கு வரலாற்று அறிவு இல்லை.. மன்னிப்பு கேட்க வேண்டும்- சீறும் வைகோ

click me!